சார்லஸ் டார்வின் எனும் இங்கிலாந்து அறிஞர் 1931-36 வரை ஆய்ந்து வெளியிட்ட உயிர்கள் பற்றிய பரிணாம கொள்கையே இன்று நவீன (உயிரியல்) அறிவியலின் பிரதானமாக இருக்கிறது இதையே நாமும் மதிப்பெண்னிற்காக மணனம் செய்து தேரிவந்தோம்..!
இதையேதான் நம்மவர்கள் ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கதையாக சொல்லியும், பதிகம், பாட்டாக படித்தும் வைத்திருக்கிறார்கள் கண்டுகொண்டோமா நாம்?
இந்த கலாச்சாரத்திலே கடவுளின் அவதாரங்களாக சொல்லப்பட்ட அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் படிமானங்களே...!
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்...!
-எனும் அருணகிரியாரின் கந்தர் அநுபூதி-51 யும்...
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்...
-எனும் திருவாசகமும்
கற்பனை என்று நவீனத்தை தலையில் தாங்கியாடும் நமக்கு யாரோ வந்து தலையில்குட்டி சொன்னால்தான் தெரிகிறது நம்மவர்களின் பெருமையே...
இதுதான் இந்த மெக்காலே கல்விமுறையின் உச்சபட்ச முட்டாள்தனம்.
இந்த புடைப்பு சிற்பம் எனது வானியல் வரலாற்று தேடலின் போது தமிழ்நாட்டின் கழுகுமலை வெட்டுவான் கோவிலின் முன்விதானத்தில் கண்டது. இது போன்ற இன்னும் ஆறு வரைபடங்களை (அனைத்தும் கல்லால் ஆனது) இந்தியாவின் பலபகுதிகளில் கண்டு ஆவனபடுத்தினோம். முதலில் வானியல் வரைபடமாக பாடம் சொன்ன இந்த சிற்பம் இப்போது பரிணாம கொள்கையின் உச்சமாக நிற்க்கிறது.
சரியாக நூறு கூறுகளை கொண்ட இது வலக்கீழ் பக்கத்திலிருந்து ஆரம்பித்து பார்த்தால் ஏதோ ஒருசெல் (ஏகாத்மா) உயிராக ஆரம்பித்து வலதுமேல் பக்கத்தில் முடியும்போது நெடுவால் கொண்ட உயிர்களையும்...!
வலக்கீழ் பக்கத்தில் ஆரம்பித்து அதே வலதுமேல் பக்கத்தில் முடியும் போது குறுவால் கொண்ட மிருகங்களையும் காட்டுகிறது. அதற்கடுத்த இரண்டாம் வரிசையில் வானியல் வாய்பாடுகளைகயும் அடுத்த வரிசையில் ஆத்மசக்கரங்களையும் காட்டுகிறது நடுவிலிருக்கும் கூறை நம்மவர்கள் எப்போழுதும் போல் சிதைத்திருக்கிறார்கள்...!
இதைபோன்ற நமக்கு தெரியாத பலநூறு ஆயிரம் நவீனங்களை நம்மவர்கள் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள் நாம்தான் வெள்ளையாய் இருப்பவனுக்கு விளக்கு பிடித்து கொண்டிருக்கிறோம்...! அறிவு விளக்கை...!!
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்